திருச்சி: பொங்கல் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டம், சூரியூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் காளையாக நற்கடல் குடி கருப்பு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
புதன்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். மொத்தம் 550 காளைகள். 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் தை 2 ஆம் தேதி நடத்தப்படும். கடந்த 15 ஆம் தேதி நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு கன மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.
வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னாள் எம்.பி குமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.