திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

பொங்கல் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டம், சூரியூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.


திருச்சி: பொங்கல் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டம், சூரியூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதல் காளையாக நற்கடல் குடி கருப்பு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

புதன்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். மொத்தம் 550 காளைகள். 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் தை 2 ஆம் தேதி நடத்தப்படும். கடந்த 15 ஆம் தேதி நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு கன மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.

வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னாள் எம்.பி குமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com