தருமபுரி: தருமபுரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளின் இறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த பட்டியலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ச.ப.கார்த்திகா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டு பேசினார்.
இதில், ஆண்கள் 637891 பேர், பெண்கள் 622857 பேர், இதரர் 161 பேர் என 1260909 பேர் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 1478 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. கரோனா பொதுமுடக்க விதிகள் பின்பற்றி 1000 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள இடங்களில் கூடுதலாக 417 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்படுத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.