சென்னை: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.22) லேசான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:-
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.22) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஜனவரி 23-ஆம் தேதி முதல் ஜனவரி 25-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும்.
சென்னையில்.....:
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.