உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.22) லேசான மழை பெய்யக்கூடும்.


சென்னை: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.22) லேசான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:-

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.22) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஜனவரி 23-ஆம் தேதி முதல் ஜனவரி 25-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும்.

சென்னையில்.....:

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com