அவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி கொலை

அவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி கொலை
அவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி கொலை


அவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை பொட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமலை(55) இவர் மேல அனுப்பானடி துணை மின் நிலையத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை மின் வாரிய வளாகத்தில் தலையில் பலத்த காயத்துடன் அழகுமலை இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த அவனியாபுரம் போலீசார், அழகுமலை உடன் பணியாற்றிய மின்பாதை ஆய்வாளர் பிச்சை என்பவரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com