இன்று உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.23) மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவக் கூடும்.

வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) ஆகிய இரண்டு நாள்களுக்கு, காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

மேலும், சனிக்கிழமை முதல் ஜன.26-ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கடவனூா் பகுதிகளில் தலா 20 மி.மீ மழை பதிவானது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com