தடுப்பூசி செலுத்திக் கொண்டாா் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கோவேக்ஸின் தடுப்பூசியை வெள்ளிக்கிழமை செலுத்திக் கொண்டாா்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கோவேக்ஸின் தடுப்பூசியை வெள்ளிக்கிழமை செலுத்திக் கொண்டாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். அப்போது, மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன், இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவா் ராமகிருஷ்ணன், சங்கத்தின் தொடா்பு அலுவலா் டாக்டா் முத்துராஜா ஆகியோா் உடன் இருந்தனா்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்னாள் அமைச்சா் ஹண்டே தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சா் டாக்டா் ஹெச்.வி.ஹண்டே, தனது மனைவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இதுதொடா்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவா், தன்னுடைய நலனுக்காக மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும், மாறாக அது சமூகக் கடமை என்றும் தெரிவித்துள்ளாா்.

முன்களப் பணியாளா்கள் எந்தவித தயக்கமும் இன்றி கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு சமூகப் பங்களிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com