தமிழகத்தில் 51 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 51,651 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 50,584 பேருக்கு கோவிஷீல்டும், 1,067 பேருக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இதுவரை 51,651 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 50,584 பேருக்கு கோவிஷீல்டும், 1,067 பேருக்கு கோவேக்ஸினும் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்துக்கு ஏறத்தாழ 12 லட்சம் தடுப்பு மருந்துகள் மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானாவிலிருந்து வந்துள்ளன. அவை அனைத்தும் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 166 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

8.33 லட்சம் பேருக்கு கரோனா: இதனிடையே, மாநிலத்தில் புதிதாக 574 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 33,585-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும், 689 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 16,205 -ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 8 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,307-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com