ஸ்ரீகிருஷ்ணா நகரில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கிறார் சட்டப்பேரவை உறுப்பினர் கே. என்.விஜயகுமார்.
ஸ்ரீகிருஷ்ணா நகரில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கிறார் சட்டப்பேரவை உறுப்பினர் கே. என்.விஜயகுமார்.

திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடியே லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

அவிநாசி: திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடியே லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பரமசிவம்பாளையத்தில் ரூ.10.38 லட்சம் மதிப்பிலும், ஸ்ரீ கிருஷ்ணா நகரில் ரூ.49.82 லட்சம் மதிப்பிலும், வள்ளிபுரம் ஊராட்சி ஜி. என்.அப்துல்கலாம் நகரில் ரூ.49.26 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சத்து, 46 ஆயிரம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிகளை திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஐஸ்வர்யா மகராஜ்,  பொறுப்பாளர் சந்திரசேகர், உதவி பொறியாளர் முத்துக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுலோக்சனா வடிவேல், முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com