திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி போந்தவாக்கம் கண்டிகையில் புதியதாக கட்டப்பட்ட பவானி அம்மன் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தற்போது இந்த கோயிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த கோயிலைத் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தாலி, உண்டியல் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆரணி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.