தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள்: ராகுல் பேச்சு

தமிழில் பேசினால் தமிழக மக்களை  ஏமாற்றி விடலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள், ஆனால் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
ஊத்துக்குளிக்கு வந்த ராகுல் காந்தியை வரவேற்ற மக்கள்
ஊத்துக்குளிக்கு வந்த ராகுல் காந்தியை வரவேற்ற மக்கள்

தமிழில் பேசினால் தமிழக மக்களை  ஏமாற்றி விடலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள், ஆனால் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கோவையில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இன்று ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்குச் செல்கிறார். இன்று காலை திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், 

'தில்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ் மக்களை மதிக்கவில்லை. தமிழ் கலாசாரத்தை மதிக்கவில்லை. 

தமிழில் பேசினால் தமிழக மக்களை  ஏமாற்றி விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அதுதான் உண்மை. 

தமிழ்ப்பற்று மிக்க தமிழ் மக்களைப் பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் கலாசாரம், பண்பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய பாட்டி இந்திரா காந்தி முதல் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல மரியாதையைக் கொடுத்து வருகின்றனர். நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன். 

நான் மற்றவர்களைப் போல அறிவுரைகள் சொல்வதற்காக இங்கு வரவில்லை. உங்களின் பிரச்னைகளை கேட்பதற்காக வந்துள்ளேன். உங்களின் பிரச்னைகளை தீர்த்துவைக்க பாடுபடுவேன். 

நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழ் மொழியை மதிக்கிறேன். தமிழகத்தில் இயற்கை வளங்கள், வாய்ப்புகள் வசதிகள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியை அடையவில்லை. அதற்கு காரணம் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உள்ளிட்டவை தமிழக மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. 

புதிய வேளாண் சட்டங்களால் கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் தில்லியில் கடும் குளிரிலும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசோ பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

தற்போதைய தமிழக ஆட்சியை மோடி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்குமானால் மக்களுக்கு தேவையானவற்றை காங்கிரஸ் கட்சி செய்யும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அதைச் சொல்லவே இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும், மரியாதைக்கும் நன்றி' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com