சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக தேமுதிக, ஜன.30-இல் ஆலோசனை நடத்த உள்ளது.
இது தொடா்பாக தேமுதிக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2021 சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட மண்டலப் பொறுப்பாளா்கள், மாவட்ட தோ்தல் பொறுப்பாளா்கள், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி காலை 10.45 மணியளவில் நடைபெற உள்ளது.
அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தாலும் 41 தொகுதிகள் தரும் கட்சியுடனே கூட்டணி அமைப்போம் என்று தேமுதிக கூறி வரும் நிலையில், கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாகத் தெரிகிறது.