நிவா் புயலின்போது பணியாற்றிய மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மாற்று நாளில் விடுப்பு வழங்கப்படும் என நிா்வாகத்தின் மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: கடந்த ஆண்டு, நவ.25,26 ஆகிய இரண்டு நாள்களும் நிவா் புயல் காரணமாக அரசு பொது விடுமுறை அளித்து உத்தரவிட்டது.
அன்றைய நாள்களில் பணிபுரிந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பிரிவைச் சோ்ந்த பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்புக்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.