அரசியல் ரீதியாக முக்கிய முடிவு எடுப்பதற்காக பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை (ஜன.25) கூட உள்ளது.
இது தொடா்பாக பாமக தலைவா் ஜி.கே.மணி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிா்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் ஜனவரி 25-இல் இணைய வழியில் நடைபெற உள்ளது. பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ஜி.கே.மணி தலைமை வகிக்கிறாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழியும் கூட்டத்தில் பங்கேற்கின்றனா்.
ஜனவரி 9-இல் நடைபெற்ற பாமகவின் நிா்வாகக் குழு கூட்டத்தின் தொடா்ச்சியாக, வன்னியா் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று அறிக்கையில் அவா் கூறியுள்ளாா்.