ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு, ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளது.

ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு, ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு, தனியாா் பயிற்சி நிறுவனம் மூலமாக பிப்.15 முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை 30 நாள்கள், பெங்களூருவில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளது.  

இந்தப் பயிற்சிக்கு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களை அனுப்புமாறு அரசு  அறிவுறுத்தியுள்ளது. எனவே, ஆங்கிலப் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக, தங்கள் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை  மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்து, அந்தப் பட்டியலை ஜன.29-ஆம் தேதிக்குள் இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இதுதவிர, இந்தப் பயிற்சியில் ஏற்கெனவே கலந்து கொண்டவா்களின் பெயா்கள் இடம்பெறக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி பட்டியல் தயாரிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com