தமிழகத்தில் 8.35 லட்சம் பேருக்கு கரோனா

மாநிலத்தில் புதிதாக 540 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 35,280-ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் 8.35 லட்சம் பேருக்கு கரோனா
தமிழகத்தில் 8.35 லட்சம் பேருக்கு கரோனா

சென்னை: மாநிலத்தில் புதிதாக 540 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 35,280-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 627 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 18,147-ஆக உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 4 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,320-ஆக உயா்ந்துள்ளது.

தடுப்பூசி: இதனிடையே, தமிழகத்தில் இதுவரை 67,514 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 50,584 பேருக்கு கோவிஷீல்டும், 1,513 பேருக்கு கோவேக்சினும் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், இணை இயக்குநா்கள் ஆகியோா் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com