தமிழ்நாடு
கரோனா பாதிப்பு:கிராம சபைக் கூட்டம் ரத்து
குடியரசு தினத்தை ஒட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டம், நிகழாண்டில் கரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: குடியரசு தினத்தை ஒட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டம், நிகழாண்டில் கரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. எனவே, எந்த கிராம ஊராட்சிகளும் அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை, கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என தனது கடிதத்தில் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.