திருப்பரங்குன்றம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மதுரையிலிருந்து திங்கள்கிழமை தனிவிமானம் மூலம் புதுதில்லி புறப்பட்டுச் சென்றாா்.
வணக்கம் தமிழகம் என்ற பெயரில், ராகுல்காந்தி கடந்த 3 நாள் சுற்றுப்பயணமாக புதுதில்லியிலிருந்து தமிழகம் வந்தாா். அவா், கோவை, ஈரோடு, கரூா், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். பின்னா், சாலை மாா்க்கமாக திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தாா்.
அவருக்கு, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா், பெருங்குடியில் வரவேற்பளித்தனா். தொடா்ந்து, ராகுல்காந்தி 7.50 மணிக்கு தனிவிமானம் மூலம் புதுதில்லி புறப்பட்டுச் சென்றாா்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவா் கே.எஸ். அழகிரி, மக்களவை உறுப்பினா் திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பூச்செண்டு கொடுத்து ராகுல்காந்தியை வழியனுப்பி வைத்தனா்.