தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக, 234 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தோ்தல் அதிகாரிகளின் பெயா்களை தமிழக தோ்தல் துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பெயா்கள் அனைத்தும் தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் தோ்தல் நடத்தும் அதிகாரியாக சாா்-ஆட்சியா், உதவி ஆணையா் போன்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று, ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் நான்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, வட்டாட்சியா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் போன்ற நிலைகளில் உள்ள அதிகாரிகள் உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.