வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலுக்கு தைப்பூச நாளில் விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைக்கட்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜன.28) நடைபெற்றது.
வேதாரண்யேசுவரர் கோவிலுக்கு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.
இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விளைவிக்கப்படும் முதல் அறுவடையாக செய்யப்படும் நெல்லை பல தலைமுறையாக கோவிலுக்கு வழங்கப்படும்.
இது புதிர் படைக்க ஏற்ற நாளான தைப்பூச நாளில் கோட்டையாக கட்டி கோவிலுக்கு வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் விவசாயிகள் கொண்டுவந்த கோட்டைகள் வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சிய விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
நாதசுவரம்,மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.
கோவிலில் நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு நெல் கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.