புத்திரகவுண்டம்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

புத்திர கவுண்டம்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்ககப்பட்டுள்ளது. 
புத்திர கவுண்டம்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
புத்திர கவுண்டம்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

புத்திர கவுண்டம்பாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்ககப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, வெளிமார்க்கெட்டில் ஒரு மூட்டை நெல் ரூ.900-க்கு விற்கப்படுகிறது. அரசு ரூ.1462-க்கு கொள்முதல் செய்கிறது. அதற்கான கொள்முதல் நிலையத்தில் சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் சித்தரா, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உமையாள்புரம் வாசுதேவன், கள்ளிப்பட்டி கணேசன் ,கொட்டவாடி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடாஜலம், தகவல் தொழில்நூட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com