நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா திருநடனக் காட்சி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை சௌந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா திருநடனக் காட்சி
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா திருநடனக் காட்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை சௌந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது.  

தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் சண்டிகேஸ்வரர் சிந்துபூந்துறை சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 30 ஆம் தேதி சத்திர புஷ்கரணி என்றழைக்கப்படும் வெளி தெப்பக்குளத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com