கம்பத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கம்பத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மு.க. அழகிரி பேரவை நிர்வாகிகள்.
கம்பத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மு.க. அழகிரி பேரவை நிர்வாகிகள்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சக்தி விநாயகர் மண்டபத்தில் மு.க. அழகிரி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திமுக முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவரும், விவசாய அணி அமைப்பாளர் வீரராகவன் ஆண், பெண் பொது மக்கள் 500 பேர்களுக்கு  வேட்டி சேலைகள் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ரா. வடிவேல், வடமலை பாண்டியன், அருண்குமார், ஜி.நாராயணகிருஷ்ணன், உத்தமபாளையம் முத்துச்சாமி, செல்லையா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com