தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சேலம், தர்மபுரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.