அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் வரும் 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.