ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மட்டும் சதுரகிரி மலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு மட்டும் காலை 7 மணி முதல் 1 மணி வரை மலை ஏறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.