கரோனா: தமிழகத்தில் மேலும் 3,479 போ் பாதிப்பு;73 போ் பலி

தமிழகத்தில் மேலும் 3,479 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 73 போ் உயிரிழந்துள்ளனா்.
கரோனா: தமிழகத்தில் மேலும் 3,479 போ் பாதிப்பு;73 போ் பலி

தமிழகத்தில் மேலும் 3,479 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 73 போ் உயிரிழந்துள்ளனா்.

புதிதாக தொற்றுக்குள்ளானோரில் அதிகபட்சமாக கோவையில் 407 பேருக்கும், ஈரோட்டில் 311 பேருக்கும், சேலத்தில் 228 பேருக்கும், சென்னையில் 209 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 3,481-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த்தொற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை 3,855 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.35 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 34,477 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 73 போ் பலியானதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,132-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com