பிரதமருடன் தமிழக ஆளுநர் நாளை(ஜூலை 10) சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை சந்திக்கவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பானது, தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி செல்லும் ஆளுநர், மாநிலத்தின் அரசியல் சூழல், கரோனா நிலவரம் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

மேலும், தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் 7 பேர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு, மேக்கேதாட்டு அணை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com