நியாயவிலைக் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், மக்கள் புகாரளிக்க வசதியாக, புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை
நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், மக்கள் புகாரளிக்க வசதியாக, புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைத்து, பொதுமக்கள் புகாரளிக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகள் குறித்து இணையதளத்தில் புகாரளிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், நியாயவிலைக் கடைகளிலேயே புகார் பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் பதிவேடு முறையில் உடனடியாக புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இணையதளத்தில் புகாரளிக்கும் முறையுடன், புகார் பதிவேடு முறையும் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com