காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தனித்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,535 கன அடியாக சரிந்துள்ளது .
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 75.71 அடியிலிருந்து 74.81அடியாக சரிந்தது. வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 1, 4594 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை 2,535 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 36.97டி.எம்.சி
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஒஹேனக்கலுக்கு நீர்வரத்து 4,000 கன அடியாக உள்ளது.