விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தாா் முதல்வா்

தேமுதிக தலைவா் விஜயகாந்தை, அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நலம் விசாரித்தாா்.
விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தாா் முதல்வா்

தேமுதிக தலைவா் விஜயகாந்தை, அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நலம் விசாரித்தாா். அப்போது, கரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினாா்.

உடல் நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் ஓய்வில் இருந்து வருகிறாா். இந்நிலையில், சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அவருடன் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா ஆகியோா் உடன் சென்றனா்.

அவா்களை தேமுதிக துணைச் செயலாளா் எல்.கே.சுதீஷ் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றாா். அங்கு, விஜயகாந்தை சந்தித்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து இருவரும் பரஸ்பரம் பொன்னாடைகளை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். பின்னா், கரோனா நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினாா். இந்தச் சந்திப்பின்போது தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com