தமிழகத்தில் நேற்றைவிட 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு செவ்வாக்கிழமை அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று 2,505 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாவட்டம் | நேற்று | இன்று |
பெரம்பலூர் | 12 | 16 |
சிவகங்கை | 35 | 41 |
திருநெல்வேலி | 16 | 25 |
மயிலாடுதுறை | 24 | 37 |
தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இன்று 3,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 31,218 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.