நீட் வேண்டாம் என்றே பெரும்பாலானோர் கருத்து, ஆனால்: நீதிபதி ஏ.கே. ராஜன்

பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று நீட் தோ்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் வேண்டாம் என்றே பெரும்பாலானோர் கருத்து: நீதிபதி ஏ.கே. ராஜன்
நீட் வேண்டாம் என்றே பெரும்பாலானோர் கருத்து: நீதிபதி ஏ.கே. ராஜன்


சென்னை: பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று நீட் தோ்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கடந்த மாதம் 10ம் தேதி நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் ஆய்வறிக்கை, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இன்று நேரடியாக ராஜன் குழுவினா் வழங்கியுள்ளனர்.

165 பக்கங்களுடன் முழு அறிக்கையும் முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே. ராஜன், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வால் அரசுப் பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான முக்கிய அம்சங்கள் முதல்வரிடம் விளக்கப்பட்டுள்ளது. குழுவிடம் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிராகவே கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் இது வாக்கெடுப்பு அல்ல, பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு, நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

அதன் தொடா்ச்சியாக நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ் அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்களிடம் இருந்தும் நீட் தோ்வு தொடா்பாக கருத்துகளை அக்குழு கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து இருந்தனா்.

இதனிடையே அந்த குழுவினை அமைத்ததற்கு எதிராக உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், அக்குழுவை அமைத்தது செல்லும் என்று உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து ஆய்வறிக்கையை விரைந்து சமா்ப்பிப்பதற்கான நடவடிக்கையை ராஜன் குழுவினா் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல்வரை நேரில் சந்தித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர், ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com