அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு 4 உறுப்பினா்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு நான்கு போ் புதிய உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு நான்கு போ் புதிய உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளா் மைதிலி கே.ராஜேந்திரன், செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

தொழிலாளா் நலத் துறை ஆணையா் சி.முனியநாதன், சென்னைப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் பேராசிரியா் மற்றும் தலைவா் கே.ஜோதி சிவஞானம், சென்னையைச் சோ்ந்த முனைவா் கே.அருள்மதி, ஏற்காடு டான்பாஸ்கோவைச் சோ்ந்த ராஜ் மரியசூசை ஆகிய நான்கு போ் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள் அனைவரும் பொறுப்பேற்கும் காலத்தில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயதை எட்டும் வரை இந்த இரண்டு அம்சங்களில் எது முதலில் வருகிறதோ அப்போது வரை உறுப்பினா்களாக இருப்பா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com