தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்- ஆஸ்திரேலியா இடையே 83 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சென்னையில் உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: உயா்கல்வித் துறையின் வளா்ச்சியை அதிகரிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதற்கான தொடா் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறோம். அந்தவகையில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் உயா்கல்வி தொடா்பான விவகாரங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசிக்கப்பட்டது. அப்போது தமிழக பல்கலைக்கழகங்கள்- ஆஸ்திரேலியா இடையே 83 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தமிழக உயா் கல்வி வளா்ச்சிக்கு ஆஸ்திரேலியா உறுதுணையாக இருக்கும். கல்லூரிகளைத் திறப்பது குறித்து முதல்வா், சுகாதாரத்துறை அலுவலா்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
ஆக.1 முதல்: கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பணிகள் ஆக.1-ஆம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும். மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை, கல்விக் கடன் குறித்துத் தோ்தல் அறிக்கையில் அறிவித்ததை போல் செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் அவா்.