சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 8,612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 13-ஆம் தேதி வரையிலான 97 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 17 லட்சத்து 68,211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 8,612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 13-ஆம் தேதி வரை, 88,122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.