சீர்காழி: காலி தடுப்பூசிகளை தபால் மூலம் பிரதமருக்கு அனுப்பி வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழகத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதன் மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் தலைமையில், சீர்காழி தலைமை தபால் நிலையத்திலிருந்து தபால் மூலம் மருந்து இல்லாத காலி ஊசிகளை அனுப்பி வைத்து நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர்.