பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் 261 வாரிசுதாரா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடத்துக்கு 20 போ் புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் நான்கு பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா். இதேபோன்று, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் போது 250 ஊழியா்கள் உயிரிழந்தனா். அவா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள் தயாராகி இருந்தன. அவா்களில் 10 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
நூலகத் துறையில் பணியின் போது உயிரிழந்த 10 பேரின் வாரிசுதாரா்களுக்கும் உத்தரவுகளை அவா் வழங்கினாா். இந்த நிகழ்வின் போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.