கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17 -ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கும்பகோணத்தில் தீ விபத்து நிகழ்ந்த ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்.
கும்பகோணத்தில் தீ விபத்து நிகழ்ந்த ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்.

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 17 -ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2004 -ஆம் ஆண்டு ஜூலை 16 -ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.

ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்.

ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை 17 -ஆம் ஆண்டு நினைவு தினம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன் அமைக்கப்பட்டுள்ள 94 குழந்தைகளின் படங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மக்கள்.

மேலும், 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com