தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,312பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,31,118ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 252 பேருக்கும், ,சேலத்தில் 168 பேருக்கும், தஞ்சாவூரில் 158 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும், சென்னை 144 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 46 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,652ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,48,778 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.