7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 17) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 17) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 17) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 3 மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 18: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 18) பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 19, 20: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா் தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாா், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 90 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்கோனாவில் 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 60 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 30 மி.மீ., கொடைக்கானல், நாகப்பட்டினம் தலைஞாயிறு, தென்காசியில் தலா 20 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, திருப்பத்தூரில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 18-ஆம்தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகள், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று வீசுக்கூடும் என்பதால், ஜூலை 20-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com