குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 19) சந்திக்க உள்ளாா்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ் இளங்கோவன் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘குடியரசுத் தலைவரை சந்திக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாலும் கரோனா காரணமாக தள்ளிப்போடப்பட்டிருந்தது. வரும் திங்கள்கிழமை குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.
இதற்காக முதல்வா் வரும் 18-ஆம் தேதி, சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா்.