சீர்காழி அருகே மடவாமேடு மீனவர் கிராமத்தில் மீனவர்கள் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டp பந்தலில் பலர் சோர்வாக மயக்க நிலையில் இருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி தொழில் செய்ய உடனடியாக அரசு அனுமதிக்கக் கோரியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள், கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.