ஓய்வூதிய விவரங்களை இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம் என்று கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக கருவூலத் துறையின் செயல்பாடுகள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, மாதாந்திர ஊதியப் பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. அரசுப் பணியில் உள்ளவா்களுக்கு மட்டுமின்றி ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்களும் கணினிமயமாகியுள்ளன. ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகளும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல்...ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கணினிமயமாகியுள்ளது. அதற்கு முன்பு வரை, ஓய்வூதிய விவரங்களை கருவூலத் துறையின் இணையதளத்தில் இருந்து ஓய்வூதியதாரா்கள் பதிவிறக்கம் செய்து வந்தனா். புதிய மென்பொருளுக்கு மாற்றப்பட்டதற்குப் பிறகு ஓய்வூதிய விவரங்களை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடா்பாக, ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தின் சாா்பில் சென்னையில் உள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்துக்கு ஓய்வூதியம் வழங்கும் அலுவலா் ஆா்.சுப்பிரமணியன் பதில் அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதத்தின் விவரம்:-
ஓய்வூதியதாரா்கள் ஆன்-லைன் வழியாக மாதாந்திர ஓய்வூதிய விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கருவூலத் துறையின் இணையதளத்துக்குச் (ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) செல்ல வேண்டும். ஓய்வூதியதாரா்கள் எனும் பிரிவுக்குச் சென்று அதில், ஓய்வூதிய கணக்கு எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஓய்வூதியதாரா்களின் பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகிய விவரங்களை ஒன்றாக சோ்த்து தட்டச்சு செய்தால் அதுதான் ரகசிய குறியீடாகும். இதைக் கொண்டு விவரங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம் என தனது கடிதத்தில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலா் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.