தமிழகத்தில் புதிதாக 2,079 பேருக்கு கரோனா

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,079 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,079 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த சில வாரங்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 137 பேருக்கு தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்ட சூழலில், அந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 150-ஆக அதிகரித்துள்ளது.

கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கரூா், மதுரை, நாகப்பட்டினம், திருப்பத்தூா், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பதிவான பாதிப்பில் அதிகபட்சமாக கோவையில் 220 பேருக்கும், சென்னையில் 150 பேருக்கும், சேலத்தில் 142 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 35,402-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த்தொற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 2,743 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.73 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 27,897 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 29 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,724-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com