மகிழ்ச்சியான செய்தி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது. 
மகிழ்ச்சியான செய்தி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மகிழ்ச்சியான செய்தி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது. 

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.61அடியிலிருந்து 73.29அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,804 கன அடியிலிருந்து 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது. 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.59 டி.எம்.சியாக இருந்தது.

கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.42 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்ததால், இரண்டு வாரங்களுக்கு முன்பு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 12000 கன அடியாக குறைக்கப்பட்டது. 
அணையின் நீர் இருப்பும் குறைந்து வந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். ஆனால் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com