ரயில் பயணிகள் நல்ல இடவசதியுடன் பகல் நேரத்தில் செளகரியமாக பயணம் செய்யும் வகையில், சென்னை-கோவை இடையே இயக்கப்படும் ரயில்களில் வழக்கமான பெட்டிகளுக்குப் பதில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றியமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி, நாள்தோறும் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை - சென்னை சென்ட்ரல் (02675, 02676) ரயில்களில், ஆக.1-ஆம் தேதி முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றியமைக்கப்படும்.
இதே போல், நாள்தோறும் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆா் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் (06079, 06080) ரயில்களிலும் ஆக.12-ஆம் தேதி முதல் வழக்கமான பெட்டிகள் எல்எச்பி பெட்டிகள் மாற்றியமைக்கப்பட உள்ளன.
அவ்வாறு மாற்றியமைப்பதன் மூலம் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் (செகண்ட் கிளாஸ்) பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் தனி இருக்கைகள் கிடைக்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.