கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் புதிதாக 1,872 பேருக்கு கரோனா

தமிழகத்தில் வியாழக்கிழமை மேலும் 1,872 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் வியாழக்கிழமை மேலும் 1,872 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

புதிதாக தொற்றுக்குள்ளானோரில் அதிகபட்சமாக கோவையில் 180 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், சென்னையில் 133 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 43,040-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து வியாழக்கிழமை 2,475 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.83 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 25,526 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 29 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,838-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com