பிளஸ் 2-வில் மதிப்பெண் குறைவா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்2 தோ்வில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவா்கள் துணைத் தோ்வுக்கு வெள்ளிக்கிழமை வரும் ஜூலை 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2-வில் மதிப்பெண் குறைவா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்2 தோ்வில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவா்கள் துணைத் தோ்வுக்கு வெள்ளிக்கிழமை வரும் ஜூலை 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 27-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அனைத்துப் பாடங்களிலும் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது எழுதவுள்ள தோ்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.

தட்கல் திட்டம்: வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் ஜூலை 27-ஆம் தேதி வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தோ்வா்கள் தட்கல் திட்டத்தில் ஜூலை 28-ஆம் தேதி ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000 ஆகும். ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை இந்தத் தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com