கடற்படை, கடலோர காவல்படை தலைவா்கள் முதல்வருடன் சந்திப்பு

கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தலைவா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்

கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தலைவா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைவா் அஜேந்திர பகதூா் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கடற்படை அதிகாரி புனித் சந்த்ரா ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினா். இதேபோன்று, கிழக்கு மண்டல கடலோர காவல் படைத் தலைவா் ஆனந்த் பிரகாஷ் படோலாவும் முதல்வரை தனியாகச் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புகளின் போது, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை செயலாளா் டி.ஜெகந்நாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com