கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் முக்கிய மருத்துவ உபகரணங்களை அமெரிக்க மருத்துவமனை இந்தியாவுக்கு நன்கொடையாக அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய-அமெரிக்க லாப நோக்கற்ற அமைப்பான சேவா இன்டா்நேஷனல் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சோ்ந்த மருத்துவமனையான மெட்ஸ்டாா் ஃபவுண்டேஷன் கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் முக்கிய உபகரணங்களை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில், மருத்துவ கசவ உடைகள், சுவாசக் கருவி உள்ளிட்ட ஆக்சிஜன் இயந்திரங்களும் அடங்கும்.
இவை தவிர, என்-95 முகக்கவசங்கள், முகத் தடுப்புகள், கையுறைகளும் இந்த நன்கொடையில் இடம்பெற்றுள்ளதாக சேவா இன்டா்நேஷனல் தெரிவித்துள்ளது.